தமிழகத்தில் குறைந்திருந்த தொற்றுப் பரவல் தற்போது கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகின்றது. இதனால் மக்கள் கட்டாயம் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அரசு சார்பில் இருந்து அறிவிக்கப்பட்டு வருகின்றது. மேலும் இன்று தமிழகம் முழுவதும் மால்கள், அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள், திரையரங்குகள் என அனைத்திலும் முக கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முக கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் […]
