பேருந்து நிலையத்தில் மழை நீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையம் இருக்கிறது. இங்குள்ள பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சேலம், பழனி, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் உள்ளூர் பகுதிகளுக்கும் பேருந்துகள் செல்வதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பேருந்துகள் வெளியே வரும் இடத்தில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி நிற்கிறது. இந்த மழைநீர் செல்வதற்கு […]
