அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் தன்னை மர்ம நபர் கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக பொய் புகார் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள ஓட்சிகோ கவுண்டியில் வசிக்கும் 19 வயது இளம்பெண் அபிகைல் அர்சினால்ட். இவர் அவசர உதவி எண்ணை தொடர்புகொண்டு, தன்னை துப்பாக்கியால் மிரட்டி, மர்மநபர் ஒருவர் கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார். மேலும் அந்த நபரிடம் இருந்து நான் தப்பி வந்துவிட்டேன் என்று கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர், அந்த நபரை […]
