தமிழக அரசு ஊழியர்கள் ஆண்டு வருமானம் அதிகம் பெறுபவர்கள் மற்றும் 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் ஆகியோருக்கு ரேஷனில் அரிசி வழங்கப்படாது என்று வெளியான செய்தி பொய் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு எந்தவித பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் பொது விநியோகத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு ஊழியர்கள், ஆண்டு வருமானம் […]
