மகாராஷ்டிராவில் மத்திய அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்ட பகுதிகளுக்குள் சிபிஐ விசாரணை நடத்த அளித்திருந்த ஒப்புதலை அம்மாநில அரசு திரும்பப் பெற்றுள்ளது. மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ டெல்லியை தவிர வேறு எந்த மாநிலங்களிலும் தனது அதிகாரத்தை பயன்படுத்த சம்பந்தப்பட்ட மாநில அரசிடம் பொது ஒப்புதல் பெறுவது அவசியமாகும். இந்த நிலையில் சிபிஐக்கு ஏற்கனவே வழங்கியிருந்த ஒப்புதலை மகாராஷ்டிரா அரசு திரும்பப் பெற்றுள்ளது. தொலைக்காட்சி டி.ஆர்.பி தொடர்பான வழக்கை மகாராஷ்டிராவில் சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில் […]
