பெரம்பலூரில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நோவா நகரில் சுமார் 150 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக தெரு மற்றும் வீடுகளில் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதையடுத்து பொதுமக்கள் தண்ணீர் பிடித்து செல்வதற்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ள பகுதியில் குழாய்கள் அமைத்து அதன் மூலம் ஊராட்சி நிர்வாகம் தண்ணீர் வழங்க ஏற்பாடு […]
