பொதுமக்களை அச்சுறுத்தி தகராறில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பையூர் அருகே உள்ள சாலையில் வாலிபர் ஒருவர் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரித்ததில் அவர் தச்சூர் கிராமத்தில் வசிக்கும் அஜித்குமார் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அஜித்குமார் அந்த வழியாக செல்லும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஆபாச வார்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டது […]
