பல நாட்கள் கழித்து நடிகர் ரஜினி பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று கொண்டுள்ளார். சூப்பர் ஸ்டார் என மக்களின் மத்தியில் பிரபலமான ரஜினி கடந்த சில நாட்களாக சொந்த வாழ்க்கையில் இருக்கும் சோகத்தால் சினிமா வாழ்க்கையில் கவனம் செலுத்தவில்லை. நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவகாரத்து பிரச்சினை ரஜினியை மிகவும் பாதித்துள்ளது. இதன் காரணமாக வீட்டில் யாரிடமும் பேசாமல் ரஜினி கடந்த சில நாட்களாக தனிமையில் இருந்துள்ளார். மேலும் மிக நெருக்கமான நண்பர்களிடம் மட்டும் பேசுவதாக தகவல்கள் வெளியாகின. […]
