சிவகங்கை மாவட்டம் கண்ணமங்கலம்பட்டி பட்டத்தரசி அம்மன் கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்ணமங்கலப்பட்டியில் சிறப்பு வாய்ந்த பட்டத்தரசி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 25-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் கோலாகலமாக தொடங்கியது. விழாவை முன்னிட்டு காலை, மாலை என இருவேளையும் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. நேற்று காலை 9 மணி அளவில் ஏராளமான பக்தர்கள் கோவில் மந்தை […]
