பொங்கல் பரிசுத் தொகுப்புடன் செங்கரும்பும் சேர்த்து வழங்கப்படும் என்று விடியா திமுக அரசு அறிவித்துள்ளது என்றும், கழகத்தின் தொடர் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி என்றும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொதுமக்கள் நலனிலும் விவசாய பெருங்குடி மக்கள் நலனிலும் சிறிதும் அக்கறை இல்லாத விடியா திமுக அரசு, வரும் பொங்கல் திருநாளையொட்டி அளிக்க இருந்த பொங்கல் தொகுப்பில் செங்கரும்பு வழங்காததை கண்டித்து அனைத்திந்திய […]
