புதுச்சேரியில் வறுகோட்டிற்கு கீழ் உள்ள ஏழைகள் மற்றும் ஆதிதிராவிடர் மக்களுக்கு குடும்ப அட்டை மூலம் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் இலவசமாக சேலை, வேட்டி மற்றும் துண்டு வழங்கப்பட்டு வந்தது. இதில் பல முறைகேடுகள் நடைபெறுவதால் இலவசமாக வழங்கப்படும் துணிகளுக்கு பதில் ரொக்கமாக வழங்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தன. இதனை தொடர்ந்து பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைகளுக்கு வழங்கும் இலவச துணிக்கு பதிலாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும் என அமைச்சர் தேனீ […]
