பொங்கலுக்குப் பின் பள்ளிகள் திறப்பது குறித்து இரண்டாம் நாளாக பெற்றோர்கள் கருத்து கேட்கும் கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவியருக்கு பள்ளிகள் திறப்பது பற்றி முதலமைச்சர் அறிவிப்பார் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து பள்ளி கல்வி துறை சார்பில் கடந்த இரு நாட்களாக அனைத்து பள்ளிகளிலும் கருத்து கேட்பு கூட்டம் நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் எனவும் இதனை […]
