காதலித்தவரை விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்ய பெற்றோர் வற்புறுத்தியதால் பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகில் உள்ள கலியங்காராஜபுரத்தில் வசிப்பவர் சோமன். இவருடைய மகன் பெயர் கிரன். பெயிண்டராக பணிபுரியும் அவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் அவரது பெற்றோர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். மேலும் கேரளாவில் பெண் பார்த்து வந்துள்ளனர். இதனால் கிரண் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் உறவினர்களுடன் பேசாமலும் இருந்து வந்துள்ளார். […]
