வளர்ச்சி பணிக்கான நிதியிலிருந்து கையாடல் செய்ததால் பேரூராட்சி செயல் அலுவலர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள பணப்பாக்கம் பேரூராட்சியில் கடந்த 2018 – 19 ஆம் ஆண்டு சம்பத்குமார் என்பவர் செயல் அலுவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் வினியோகம், சாலை அமைத்தல், மின் விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து பல லட்ச ரூபாய் கையாடல் செய்துள்ளார். இதுகுறித்து வேலூர் மாவட்ட லஞ்ச […]
