குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள 18-வார்டு மக்களுக்கும் வைகை அணையின் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக 12வது வார்டு பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வந்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் […]
