பேருந்து பள்ளத்திற்குள் பாய்ந்த விபத்தில் 17 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூரில் இருந்து கொங்காடை கிராமத்திற்கு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை வெங்கடசாமி(39) என்பவர் ஒட்டி சென்றுள்ளார். இதில் சதாம்(39) என்பவர் கண்டக்டராக இருந்துள்ளார். அந்த பேருந்தில் 59 பயணிகள் இருந்துள்ளனர். இந்நிலையில் மலைப்பகுதியில் மணியாச்சி பள்ளம் அருகே சென்ற போது எதிரே ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. அந்த மோட்டார் சைக்கிளுக்கு இடம் விடுவதற்காக ஓட்டுநர் பேருந்தை […]
