ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் வசித்து வருபவர் முகமது அனிஷ் (30). இவர் சத்தி மெயின் ரோட்டிலுள்ள பேக்கரியில் பணிபுரிந்து வருகிறார். இவருடன் பணிபுரிபவர்கள் சலீம் (25), பசீர் (28). இந்நிலையில் 3 பேரும் முகமது அனிஷ் வீட்டுக்கு நேற்று காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது காரை முகமதுஅனிஷ் ஓட்டினார். இந்த நிலையில் அவ்வழியாக வந்த அரசு பேருந்து கார் மீது மோதிவிட்டது. இதனால் தலைகுப்புற கவிழ்ந்த கார் பேருந்தின் அடியில் சிக்கிக் கொண்டது. இதையடுத்து விபத்து ஏற்பட்டதும் […]
