கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நாகமங்கலத்தில் இருந்து தனியார் பேருந்து பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ளனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் அருகே சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த வயலில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்துக்கு அடியில் சிக்கி யசோதா என்ற பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு […]
