கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் இருந்து அரசு பேருந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை செந்தில்குமார் என்பவர் ஓட்டி சென்றனர். கண்டக்டராக உதயகுமார் என்பவர் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் குடிபோதையில் இரண்டு பேர் பேருந்தில் ஏறி ஆபாச வார்த்தைகளால் பேசிக் கொண்டிருந்ததால் சக பயணிகள் முகம் சுழித்தனர். இதனை கவனித்த ஓட்டுநரும், கண்டக்டரும் பேருந்தில் அமைதியாக பயணிக்கும்படி இருவரிடமும் கேட்டுக் கொண்டனர். அதனை கண்டு கொள்ளாமல் இரண்டு பேரும் தொடர்ந்து ஆபாசமாக பேசியதால் நெகமம் […]
