பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பாய்ந்த விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். மேகலாயா மாநிலம், துரா- ஷில்லாங்கிற்கு 21 பயணிகளை ஏற்றி சென்ற பேருந்து மேற்கு காசி மலைப்பகுதி மாவட்ட எல்லையில் நேற்று அதிகாலை வந்தபோது திடீரென தன் கட்டுபாட்டை இழந்து, நோங்சராம் பாலத்திலிருந்து ஆற்றில் பாய்ந்தது. இந்த கோர விபத்தில் பேருந்து ஓட்டுனர் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்தவர்களை […]
