பேருந்துக்கு ஓட்டுநர் கோவிலில் வைத்து பூஜை செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலுள்ள பர்கூர் மலைப்பகுதியில் இருந்து செங்குளம், ஓசூர், மணியாச்சி கொங்காடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு பேருந்து இயக்கப்படுகிறது. கடந்த வாரம் அரசு பேருந்து மணியாச்சி பள்ளம் அருகே விபத்துக்குள்ளானதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர்த்தப்பினர். இதனை அடுத்து விபத்துக்குள்ளான பேருந்தை பொக்லைன் எந்திரம் மூலம் மீட்டனர். இந்நிலையில் அந்த பேருந்தின் ஓட்டுநர் அந்தியூரில் இருக்கும் பத்திரகாளி அம்மன் கோவிலுக்கு முன்பு பேருந்தை நிறுத்தி அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க […]
