ராமநாதபுரம் மாவட்டத்தில் பேரிச்சம்பழம் பண்ணையை ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் அத்தியூத்து கிராமத்தில் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் முகமது இஷாத் என்ற பயனாளி தோட்டத்தில் ரூபாய் 8790 மானியத்தில் பயிரிடப்பட்டுள்ள கொய்யா செடிகளையும் 4920 மானியத்தில் பயிரிடப்பட்டுள்ள மா செடிகளையும் ஆட்சியர் பார்வையிட்டார். இதையடுத்து அழகன்குளம் கிராமத்தில் […]
