சட்டவிரோதமாக செயல்களில் ஈடுபட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள பேரளம் ரயில்வே கேட் அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியில் வேகமாக வந்த ஒரு சரக்கு ஆட்டோவை காவல்துறையினர் வழிமறித்து சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் ஆட்டோவில் மூட்டை மூட்டையாக புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து ஆட்டோவில் வந்தவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர்கள் ஸ்ரீவாஞ்சியம் பகுதியை சேர்ந்த […]
