சேலம் மாவட்டம் பேப்பர் அலாய்டு விற்பனையாளர்கள் சங்க செயலர் விஸ்வநாதன் கூறியிருப்பதாவது, “வெளிநாட்டிலிருந்து பேப்பர் தயாரிப்புக்கான மூலப்பொருட்களின் இறக்குமதி நிறுத்தப்பட்டதை காரணம்காட்டி பேப்பர் விலையானது கடந்த 2021 பிப்ரவரி முதல் அதிகரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பிரசித்திபெற்ற காகித ஆலைகளான டிஎன்பிஎல் சேசாய், பலார்பூர் ஜெ.கே. வேஸ்ட் கோர்ட்ஸ், ஆந்திரா பேப்பர் ஆலை போன்றவற்றுக்கு தேவையான மூலப்பொருட்கள் வெளிநாடுகளிலிருந்து வந்தது. அது தற்போது முற்றிலும் நின்றுவிட்டது. காகித ஆலைகள் தங்களது தயாரிப்பு பேப்பர் உள்ளிட்டவற்றின் விலையை ஜனவரி 15 […]
