முல்லைப்பெரியாறு பேபி அணையில் மரங்களை அகற்றும் விவகாரத்தில் கேரளாவின் முரண்பட்ட நிலைப்பாட்டுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். முல்லைப்பெரியாறு பேபி அணையை வலுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள அதற்கு கீழ் பகுதியில் உள்ள 15 மரங்களை வெட்ட தமிழக அரசு நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறது. கேரள வனத் துறை சில நாட்களுக்கு முன்பு மரங்களை வெட்ட அனுமதி அளித்தது. இதற்காக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் முக. ஸ்டாலின் கடிதம் எழுதினார். […]
