விருத்தாச்சலத்தில் ஆசிரியை மாணவன் கத்தியால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்தில் காட்டுக்கூடலூர் சாலை திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சரவணகுமார். இவர் மனைவி 42 வயதான ரேகா. இவர் விருத்தாசலத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பள்ளிக்கூடத்தின் அருகில் வீடு இருப்பதால் ரேகா தினமும் பள்ளிக்கூடத்திற்கு நடந்து செல்வார். அதேபோல் நேற்று காலை பள்ளிக்கூடத்திற்கு சென்ற ரேகா மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்துள்ளார். […]
