உலகிலேயே முதல்முறையாக தண்ணீரில் நனைந்தாலும் பாதிக்காத மற்றும் வளையும் திறனுடைய பேட்டரி கனடா ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், இந்த பேட்டரியை உருவாக்கியுள்ளனர். மேலும், இதன் மூலம் உடலில் அணியக்கூடிய கருவிகள் சாத்தியமாகியிருக்கிறது என்றும், தெரியாமல் தண்ணீரில் நனைத்து விட்டால் கூட நீடித்து உழைக்க கூடியது என்றும் அவர்கள் கூறியுள்ளார்கள். மேலும், இந்த பேட்டரியை இரண்டாக மடிக்கவும் முடியும், இரண்டு மடங்காக இழுக்கவும் முடியும். ஏற்கனவே உடலில் அணியக்கூடிய பேட்டரிகள் பயன்பாட்டில் […]
