ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பினை அசம்பிள் செய்து கொடுக்கும் ‘பேகட்ரான் கார்ப்’ நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி ஆலையை அமைக்க முடிவெடுத்துள்ளது. உலகிலுள்ள முன்னணி மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்களின் முதலீட்டினை ஈர்க்கக்கூடிய திட்டத்தினை இந்திய அரசானது ஜூன் மாதத்தில் அறிவித்திருந்தது. இந்தத் திட்டமானது 6.6 பில்லியன் டாலர் மதிப்புடையது.மேலும் ஊக்கத்தொகையும், உற்பத்தி தயார் நிலையிலிருக்கும் கிளஸ்டர்களை உருவாக்கக்கூடிய அறிவிப்புகள் அனைத்தும் இதில் அடங்கும். இதனை தொடர்ந்து பேகட்ரான் கார்ப் நிறுவனமானது அவர்களுடைய உற்பத்தி ஆலையை இந்தியாவில் உருவாக்க திட்டமிட்டிருக்கின்றது. […]
