பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய ஆசிரியருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நீதிபதி வழங்கியுள்ளார். சேலம் மாவட்டத்திலுள்ள பெரமனூர் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கலக்கம்பாடி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்தார். கடந்த 2012-ஆம் ஆண்டு இவருக்கும், பட்டதாரி பெண்ணிற்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசையாக பேசி அந்தப் பெண்ணை அவர் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து கர்ப்பமான அந்தப் பெண்ணை செந்தில்குமார் திருமணம் செய்து […]
