பென்னாகரம் அருகே மதுபோதையில் தந்தையை அடித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் எம்.கே நகரை சேர்ந்தவர் முனியப்பன்.. 75 வயது கூலி தொழிலாளியான இவருக்கு 6 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முனியப்பனின் மனைவி இறந்துவிட்டதால் தற்பொழுது அவர் மட்டும் தனியாக வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், ஜூலை […]
