மனைவி மீது சந்தேகப்பட்டு கணவர் அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் அணிகுருந்தான் பகுதியில் முருகானந்தம் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவருக்கு பூங்கோதை என்ற மனைவியும், அபிநயா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் அபிநயாவிற்கு திருமணம் முடிந்து பரமக்குடியை அடுத்துள்ள சோமநாதபுரத்தில் கணவருடன் வசித்து வருகிறார். இதனையடுத்து கடந்த 6 மாத காலமாக தனது மகள் வீட்டிலேயே வசித்து அப்பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை […]
