கோத்தகிரியில் காட்டுப்பன்றி தாக்கியதால் ஒரு பெண் உயிரிழந்ததால் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோத்தகிரி பகுதியில் உள்ள தென்றல் நகரைச் சேர்ந்தவர் சரோஜா என்ற காளியம்மாள். இவர் நேற்று முன்தினம் மாலை 7 மணி அளவில் தனது வீட்டின் பக்கத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த பாதை வழியாக வந்த காட்டுப்பன்றி காளியம்மாளை தாக்கியது. காட்டுப்பன்றி தாக்கியதால் தடுமாறிய காளியம்மாள் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் அரசு […]
