வேலை பார்த்து கொண்டிருந்த போது மரம் முறிந்து விழுந்து பெண் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஓவேலி பேரூராட்சி ஹெல்லி தனியார் எஸ்டேட்டில் பெண் தொழிலாளர்கள் கொட்டும் மழையில் பச்சை தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பெண் தொழிலாளர்கள் மீது மரம் முறிந்து விழுந்தது. அந்த மரத்தின் அடியில் 2 தொழிலாளர்கள் சிக்கி சத்தம் போட்டனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டனர். ஆனால் மரத்தின் அடியில் சிக்கி […]
