மதுரை மாவட்டத்திலுள்ள வீரப்பட்டி கிராமத்தில் இருக்கும் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக போலீஸ் பாதுகாப்புடன் தாசில்தார் சிவராமன், வருவாய் துறை அலுவலர்கள் ஆகியோர் அங்கு சென்றனர். அப்போது ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு பெண் வீட்டிற்குள் சென்று மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனை பார்த்ததும் போலீசார் அந்த பெண்ணை குண்டு கட்டாக தூக்கி வெளியே கொண்டு வந்தனர். இதனையடுத்து வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது, 50 ஆண்டுகளாக நாங்கள் […]
