ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண் செய்தி வாசிப்பாளர்கள் தன் முகத்தை மூடிக்கொண்டு தான் தொலைக்காட்சியில் செய்தி வாசிக்க வேண்டும் என்று தலிபான்கள் அறிவித்திருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள். அதன்படி வெளியிடங்களில் பெண்கள் தலையிலிருந்து கால் வரை மூடிக் கொள்ளும் வகையில் பர்தா அணிந்திருக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டார்கள். மேலும் அரசு துறையில் பணியாற்றும் பெண்கள் கட்டாயமாக பர்தா அணிய வேண்டும், இல்லையெனில் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று அறிவித்தார்கள். இது மட்டுமல்லாமல் […]
