பெங்களூருவில் இருந்து ஜெய்ப்பூர் சென்ற விமானத்தில் நடுவானில் ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவிலிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு இன்று காலை 5.45 மணி அளவில் இண்டிகோ விமானம் புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது பெண் பயணி ஒருவருக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து விமான குழுவினர் அந்தப் பெண்ணின் நிலைமையை புரிந்து கொண்டு விமானத்தில் யாராவது மருத்துவர்கள் இருப்பார்களா என்று விசாரித்தனர். இதையடுத்து அதிர்ஷ்டவசமாக மருத்துவர் சுபஹான் நசீர் […]
