நாமக்கல் மாவட்டத்தில் 3வதும் பெண் பிள்ளை பிறந்ததால் தாயே குழந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமபட்டியில் சூரியா என்பவர் அவரது மனைவி கஸ்தூரி(27) என்பவருடன் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு சிவரஞ்சனி(6), பிரியதர்ஷினி(4) என்ற 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கஸ்தூரி 3வதாக கர்ப்பமடைந்த நிலையில் நாமக்கல் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து கடந்த 13ஆம் தேதி அந்த குழந்தை இறந்துவிட்டதாக எருமபட்டி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்து […]
