பாகிஸ்தானில் கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபடுபவர்களை பொது இடத்தில் வைத்து தூக்கிலிட வேண்டும் என பெண் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி வருகின்றனர். பாகிஸ்தானில் கடந்த ஆறு வருடங்களில் மட்டும் 22 ஆயிரம் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பெண் உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டப்பட்டிருந்தவர்களில் 77 பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டதாகவும் கடுமையான தண்டனைகள் இல்லாததால் குற்றங்களும் அதிகரித்து வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். மேலும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான […]
