கேரளாவிற்கு சட்ட விரோதமாக கஞ்சாவை கடத்த முயன்ற 2 பேரை கைது செய்த போலீசார் 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு அதிக அளவில் கஞ்சா கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது. அதனை தடுக்க காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கூடலூரில் இருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் கூடலூர் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். […]
