கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தாமரைசேரி பகுதியில் ஹர்சீனா(30) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. அறுவை சிகிச்சைக்கு பிறகு இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனைக்கு சென்றா.ர் அங்கு அவருக்கு ஸ்கேன் பார்க்கப்பட்டது. அந்த ஸ்கேனில் வயிற்றில் கத்திரிக்கோல் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு 12 செ.மீ நீளமுள்ள கத்திரிக்கோல் அகற்றப்பட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக […]
