பெண்ணின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு அருகே கீழ உப்பூரணி பகுதியில் செல்வகனி (53) என்பவர் தனியாக வசித்து வருகிறார். இவருடைய கணவர் நடராஜன் கடந்த 22 வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்டார். இதனால் செல்வக்கனி கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகிறார். இதே பகுதியில் திரவியக்கனி- நீலாவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கும் செல்வகனிக்கும் இடையே நிலம் தொடர்பாக தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் நீலாவதி அதிகாரிகள் […]
