திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே லாரி மோதியதில் இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிரியம்பட்டியில் தேவதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அலமேலு என்ற மனைவி இருந்தார். இவரும், அதே பகுதியில் வசித்து வரும் திருமலைசாமி என்பவரது மனைவி விஜயாவும் விட்டல்நாயக்கன்பட்டியில் இயங்கி வரும் தனியார் நூற்பாலை ஒன்றில் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர். இவர்கள் 2 பேரும் கிரியம்பட்டியில் இருந்து நூற்பாலைக்கு நடந்து செல்வது வழக்கம். அந்த […]
