காலி குடங்களுடன் பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருக்கோகர்ணம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதியில் சில ஆண்டுகளாக குடிநீர் சரியாக விநியோகிக்கப்படவில்லை. இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் பொதுமக்கள் குடிதண்ணீர் விலைக்கு வாங்க வேண்டிய அவல நிலை உருவாகியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். […]
