டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற பெண்களின் புகைப்படம் பிரபல இதழின் அட்டைப்படத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு தரப்பினரும் விவசாயிகளின் இந்த போராட்டத்தை ஆதரித்து வரும் நிலையில் நூறு நாட்கள் நடைபெற்ற இப்போராட்டத்தில் 20க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் விவசாயிகளிடம் அரசின் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. தலைநகர் டெல்லியில் திக்ரி, காஜிபூர், சிங்கு போன்ற எல்லைப்பகுதிகளில் […]
