நாடு முழுவதும் நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. சில நாட்களில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டாலும், பெரும்பாலான நாட்களில் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயராமல் அப்படியே இருந்த நிலையில் 2 நாட்களாக உயர்த்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதல் முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் விலை 100 ரூபாயை நெருங்கியது. […]
