பெட்டிக்கடையில் பட்டாசு விற்பனை செய்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரிசர்வ் லைன் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு பெட்டிக்கடையில் பட்டாசு விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் கடையின் உரிமையாளரான ஞான சேகர் என்பவரிடமிருந்து பட்டாசுகளை பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அண்ணாகாலனி பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். […]
