அயர்லாந்திலிருந்து, போலந்திற்கு சென்றுகொண்டிருந்த விமானம் திடீரென்று ஜெர்மனியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அயர்லாந்திலிருந்து Ryanair நிறுவனத்தின் விமானம், சுமார் 160 பயணிகளுடன் போலந்து நாட்டிற்கு நேற்று புறப்பட்டு சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது இரவு சுமார் எட்டு மணிக்கு விமானம் திடீரென்று பெர்லினில் தரையிறங்குவதற்கு அனுமதி கோரியுள்ளது. அதன்பின்பு விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ஜெர்மன் நாட்டின் பெடரல் காவல்துறையினர், உடனடியாக அந்த விமானத்தை சூழ்ந்து மோப்ப நாய்களுடன் விமானத்திற்குள் சோதனை செய்துள்ளார்கள். அதில் எந்தவித […]
