போதைப்பொருள் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நடிகைகள் ராகினி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக நடிகைகள் ராகினி, சஞ்சனா கல்ராணி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இருவரிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியதையடுத்து பெங்களூரு சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் தங்களை ஜாமினில் விடுதலை செய்யக்கோரி […]
