பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்தி வைத்துள்ளது. சமீபகாலமாக பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தியாவில் பத்திரிக்கையாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டவர்கள் செல்போன்கள் ஒட்டு கேட்டதாக கூறப்பட்ட நிலையில், இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய பிரச்சினையாக வெடித்தது. இதனை காரணமாக வைத்து எதிர்க் கட்சியை சேர்ந்தவர்கள் நாடாளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டனர். இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் அளித்துள்ள […]
