ஊரடங்கு நேரம் என்பதால் பூ விற்பனை ஆகாமல் விவசாயிகள் சாலையில் கொட்டி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோவிலூர், அடிலம், நாகனம்பட்டி, முக்குலம், கும்பார அள்ளி, மொட்டலூர், தீண்டல், காரியமங்கலம், கோவிலூர், பெரியாம்பட்டி ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருக்கும் விவசாயிகள் அதிகளவில் பூ சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்தப் பகுதிகளில் செண்டுமல்லி, கனகாம்பரம், பட்டன் ரோஸ், கோழிக்கொண்டை பூ, அரலி, குண்டு மல்லி, செண்டுமல்லி, சம்பங்கி போன்ற பல்வேறு வகையான பூக்களை சாகுபடி செய்து வருகின்றனர். […]
